ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆடிப்பெருக்கு விழா: பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை

ஆடிப்பெருக்கு விழா நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
பவானிசாகர் அணை
Updated On :31 ஜூலை 2022, 6:45 am

DIN

ஆடிப்பெருக்கு விழா நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை. 3 வது ஆண்டாக தொடரும் தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

ஆடிப்பெருக்கு விழா நாளில் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி உயரம். 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உள்ளது. அணை மேல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட ஆண்டுதோறும் ஆடி 18 ம் பெருக்கு அன்று ஒருநாள் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல்,  கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 100.68 அடியாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு ஆடி 18ஆம் பெருக்கு அன்று பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 100.68 அடிக்கும் மேல் உள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு கால பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அணையின் பாதுகாப்பு கருதி ஆடி 18ஆம் பெருக்கு அன்று அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அணை மேல் பகுதியில் உள்ள நீர்த்தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை எனவும் அதே சமயம் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் செயல்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டிருந்த நிலையில், அணை மேல் பகுதியை பொதுமக்கள் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும், பவானிசாகர் அணை மேல்பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.