எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒருதலைபட்சமானது' - போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி (விடியோ)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒரு தலைபட்சமானது என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் குற்றம்ச்சாட்டியுள்ளார். 

News image

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

Updated On :1 ஜூன் 2022, 10:12 am

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை ஒருதலைபட்சமானது என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் குற்றம்ச்சாட்டியுள்ளார். 

தூத்துக்குடியில் 22.5.2018-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கனாது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இறுதி குற்றப்பத்திரிகையில் 101 பேரில் ஏற்கனவே 27 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இன்று 74 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 64 பேர் மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி பசும்பொன் சண்முகையா முன்பாக நேரில் ஆஜராகினர்.

இதனையடுத்து வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட 64 பேரும் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட பின்னர் வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் பேசுகையில், சிபிஐ விசாரணை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமானது எனவும், குற்றப்பத்திரிக்கையில் காவல்துறையினரின் பெயர் இடம்பெறாமல் போராடிய பொதுமக்களை குற்றவாளிகளாக மாற்றியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் எனவும், துப்பாக்கிச்சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் சிபிஐ அறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.