டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை மாற்றக் கோரி தொடர் ஓட்ட போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தம்

லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தொடங்கிய தொடர் ஓட்ட போராட்டத்தை குமுளி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

News image
லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை மாற்றக் கோரி தொடர் ஓட்ட போராட்டம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:25 am

DIN


கம்பம்: லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தொடங்கிய தொடர் ஓட்ட போராட்டத்தை குமுளி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு, அம்ருத் என்ற கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை வைகை அணையிலிருந்து தொடங்க கோரி, பாரதிய கிசான் சங்கம், முல்லைப் சாரல் விவசாய சங்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் லோயர் கேம்ப் குறுவனூத்து பாலத்திலிருந்து, வைகை அணை வரை தொடர் ஓட்ட போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். 

அதன்படி, வெள்ளிக்கிழமை குறுவனூத்து பாலத்தில் டாக்டர் சதீஷ் பாபு, கொடியரசன் ஆகியோர் தலைமையில் வந்தனர். காவல் ஆய்வாளர் எம்.பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்,  போராட்டம் நடத்தவந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று தெரிவித்தனர். போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.