47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காஞ்சி காமகோடி மருத்துவமனைக்கு நவீன அல்ட்ராசவுண்ட் கருவி

சென்னை, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக ரூ.21 லட்சம் மதிப்பிலான அதிநவீன அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை கருவி வழங்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூன் 2022, 9:48 pm

DIN

சென்னை, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக ரூ.21 லட்சம் மதிப்பிலான அதிநவீன அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை கருவி வழங்கப்பட்டது.

காக்னிசன்ட் ஃபவுண்டேசன் (சிஎஃப்) மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து அளித்த அந்தக் கருவி மூலம் கரோனா நோயாளிகளுக்கும், பிற நோயாளிகளுக்கும் துல்லியமான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும் என மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அந்தக் கருவியை வழங்கும் நிகழ்ச்சி காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி எஸ்.சந்திரமோகன், மருத்துவ இயக்குநா் ரமேஷ், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் எம். சீனிவாசராவ், சி.எஃப் அமைப்பின் இயக்குநா் கஸ்தூரி பாலாஜி, தலைமை செயல் அதிகாரி ராஜஸ்ரீ நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.