“வந்தபின் தவிப்பதை விட வருமுன் காப்பது மேல்” என்பதை நாம் அறிவோம். இது போன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. குறிப்பாக, ஆறுகள், குளங்கள் உள்ள நீர்நிலைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், காவல் துறையினர், அனைவரும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துச்சொல்வதோடு, அவ்வாறு யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கி, பொதுமக்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விளக்கிச் சொல்லவேண்டும் என்றும் இந்த தருணத்தில் அன்போடும், அக்கறையோடும் கேட்டுக் கொள்கிறேன்.