முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அமமுக ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், முதல்வர், திமுக தலைவர் முன்னிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும் – வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியின் வழிகாட்டுதலில் ஈரோடு தெற்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் சக்தி (எ) சிவசுப்பிரமணியன், Ex.M.C., தலைமையில் மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பெஸ்ட் கே.சிவகுமார், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.கலைச்செல்வி, மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ஆர்.வி.தனுஷ், பகுதிச் செயலாளர்கள் கொல்லாம்பாளையம் எம்.அன்னபூரணி, திண்டல் ஏபி.தனவர்ஷன், மாணிக்கம்பாளையம் கே.என்.செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.விக்னேஷ், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் (பொறுப்பு) ஆர்.வினோத்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதையும் படிக்க- சீர்காழி அருகே 2 வயதில் உலக சாதனை படைத்த குழந்தை!
அதுபோது கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.