மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஹிந்தி குறித்துப் பேசியது என்ன? டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

ஹிந்தி மொழி குறித்த திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

News image
Updated On :6 ஜூன் 2022, 12:55 pm

DIN


ஹிந்தி மொழி குறித்த திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் அண்மையில் நடைபெற்ற மொழித் திணிப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன், ஹிந்தி மொழி நுழைவது பற்றிப் பேசினார்.

அவர் பேசியதாவது:

"ஹிந்தி மொழி என்ன செய்யும்? நம்மை சூத்திரர்களாக்கும். அது நமக்கு எந்தப் பலனையும் தராது. மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களா, இல்லையா? ஏன் கேட்கிறேன் என்றால், இந்த மாநில மக்களின் தாய்மொழ் ஹிந்தி அல்ல.

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட ஹிந்தி பேசும் மாநிலங்கள் வளர்ச்சியடையாத மாநிலங்கள். 

நான் ஏன் ஹிந்தி படிக்க வேண்டும். அவர்கள் நம் கலாசாரத்தை அழித்து ஹிந்தி மொழி மூலம் மனு தர்மத்தைத் திணிக்க முயற்சிக்கின்றனர். இதை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் நாம் அடிமைகளாக, சூத்திரர்களாக ஆகிவிடுவோம்.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் அடையாளம். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மொழிகளையும் ஊக்கப்படுத்த வேண்டும்."

இதில் சூத்திரர்கள் எனக் குறிப்பிட்டது சர்ச்சையான நிலையில், டிகேஎஸ் இளங்கோவன் இதுபற்றி தற்போது விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"சூத்திரர் என்ற சொல்லை நான் உருவாக்கவில்லை. தமிழ்ச் சமூகம் சமநிலையானது. தெற்கில் வர்க்க வேறுபாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. வடக்கிலிருந்து நுழைந்த மொழி, எங்களைப் பிரித்தது. திராவிட இயக்க காலத்தில் மக்கள் சூத்திரர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உரிமைகளுக்காகப் போராடினார்கள்.

நான் கூறியது என்னவென்றால், ஹிந்தி நுழைந்தால் வடக்கிலுள்ள கலாசார நடைமுறைகளும் உள்ளே நுழையும். எனவே, அது சூத்திர வர்க்கத்தை உறுதிப்படுத்தும் என்றுதான் நான் கூறினேன்" என்று தெரிவித்துள்ளார் இளங்கோவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.