தமிழ்நாட்டில் அதிகரித்த கரோனா: 195 பேருக்கு தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 195 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழ்நாட்டில் புதிதாக 195 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) 195 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தென்காசி: காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு; கிராம மக்கள் போராட்டம்
மேலும், 101 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,17,466 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
புதிதாக உயிரிழப்புகள் பதிவாகாததால், மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 1,021 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை வரை சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...