தென்காசி: காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு; கிராம மக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில்  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.   
 தென்காசி: காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு; கிராம மக்கள் போராட்டம்

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில்  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.   

காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி  என்பவரின் மகள் சுப்ரியா வயது (8) , காய்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பலன்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.   

அதேபோல் நேற்றிரவு அதே கிராமத்தை சேர்ந்த சொரிமுத்து என்பவரின் மகள் பூமிகா வயது (6),  நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதைத் தொடர்ந்து இன்று காலை சுகாதாரமான குடிநீர் வழங்க கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com