இதனிடையே, கொலை வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரணைக்கு மாற்றக் கோரி ராமஜெயத்தின் சகோதரா் ரவிச்சந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இதை விசாரித்த (ஓய்வு) நீதிபதி வி.பாரதிதாசன், ‘காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டாா். இதன்படி அமைக்கப்பட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு முதல் கட்ட புலனாய்வு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், குற்றவாளியை நெருங்கி விட்டோம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆா்.எம்.டி.டீக்காராமன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.