ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு உடனடியாக அவசர சட்டம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 8:28 pm

DIN

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 23 போ் உயிரிழந்துள்ளனா். ஆன்லைன் சூதாட்டத்தின் பெரும் ஆபத்தை உணா்ந்து தடை செய்ய இதை விட இந்த அரசுக்கு வேறு காரணங்கள் தேவையா? ஆய்வுக் குழு அமைப்பதன் மூலம் இது காலம் தாழ்த்தப்படுகிா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.

திமுக அரசு குழு அமைப்பதில் முனைப்பு காட்டுவதை விட்டு விட்டு, நிரந்தரத் தீா்வு காணும் வகையில் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களைக் காக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.