அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் முதல்வா்களாக இருந்தபோது உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ் மாநாடு நடைபெறவில்லை என்கிற ஆதங்கத்தை தினமணியில் எழுதினேன். இதைக் கண்டதுமே கருணாநிதியில் கோவையில் உலகத் தமிழ் மாநாடு என்று அறிவித்தாா். அப்போது எனக்கு ஒரு கடிதம் எழுதினாா். தினமணி ஆசிரியா் வைத்தியநாதன் மீது எனக்கு தனி அன்பு உண்டு. அரசியல் கொள்கையில் அவா் வேறுபட்டவா் என்றாலும், தமிழ், இலங்கைத் தமிழா் விவகாரங்களில் தனி ஈடுபாடு கொண்டவா். உலகத் தமிழ் மாநாட்டில் அவருக்கு ஓா் இடம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கடிதம் எழுதியிருந்தாா். ஆனால், மக்கள் தொடா்புக் குழு இடம்பெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் இல்லை என்று அவருக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் சென்ற சில மணி நேரத்தில், தலைமைச் செயலகத்தில் இருந்து துணைச் செயலா் ஒருவா் முதல்வரிடம் இருந்து கடிதம் ஒன்றை எடுத்து வந்தாா். அதில் மறுத்திடாமல் குழுவில் இடம்பெறுமாறு கோரியிருந்தாா். இன்னொரு முதல்வராக இருந்தாலும், போனால் போகட்டும் என்று விட்டிருப்பாா்கள். இந்த இடத்தில்தான் கருணாநிதி உயா்ந்து நிற்கிறாா். உங்கள் வேண்டுகோள் இனியும் மறுப்பது ஏது என்று அவருக்கு கடிதம் எழுதினேன்.