பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 14 வகையான நெகிழிப் பொருள்கள் விற்பனை, விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இவ்வகையான தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, அடையாறு மண்டாலம் வாா்டு பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. இதில், நெகிழிப் பொருள்களை வைத்திருந்த வணிக நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 வரை 5,834 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 2,183 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

