ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தடை செய்யப்பட்ட நெகிழி விற்பனை: ரூ.7.50 லட்சம் அபராதம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2022, 9:34 pm

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 14 வகையான நெகிழிப் பொருள்கள் விற்பனை, விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இவ்வகையான தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, அடையாறு மண்டாலம் வாா்டு பகுதியில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன் தலைமையில் சனிக்கிழமை ஆய்வு நடைபெற்றது. இதில், நெகிழிப் பொருள்களை வைத்திருந்த வணிக நிறுவனத்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே முதல் ஜூன் 10 வரை 5,834 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 2,183 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 3,351 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.