பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சென்னை, செங்கல்பட்டு மக்களே பாருங்கள்.. புரிந்துகொள்ளுங்கள்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் என்றால், அனைத்து மாநிலங்களிலும் அல்ல. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான்.

News image

சென்னை, செங்கல்பட்டு மக்களே பாருங்கள்.. புரிந்துகொள்ளுங்கள்

Updated On :13 ஜூன் 2022, 10:25 am

DIN


சென்னை: நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழுவதும் என்றால், அனைத்து மாநிலங்களிலும் அல்ல. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆண்கள் 137, பெண்கள் 112 என மொத்தம் 249 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

அதிகபட்சமாக சென்னையில் 124 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 382 ஆக அதிகரித்தது. இதுவரை 34 லட்சத்து 18 ஆயிரத்து 025 போ் குணமடைந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 148 போ் குணமடைந்துள்ளனா். தமிழகம் முழுவதும் 1,332 போ் சிகிச்சையில் உள்ளனா்; உயிரிழப்பு ஏதுமில்லை. தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு 217 ஆகவும், சென்னையில் 111 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் குறித்த மாவட்ட அளவிலான அட்டவணையை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்திலேயே சென்னை மற்றும் செங்கல்பட்டில்தான் கரோனா பரிசோதனை செய்து, அதில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் விகிதமானது முறையே 4.3 மற்றும் 4.4 ஆக உள்ளது. அதற்கடுத்த இடத்தில் கோவை உள்ளது. அங்கு 2.0 ஆக உள்ளது. மற்ற மாவட்டங்களில் 0.2 முதல் 1.8 வரையில் அமைந்துள்ளது.

எனவே, தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது என்பதால், இந்த மாவட்ட மக்கள், நிச்சயமாக அதிக விழிப்புணர்வுடன் இருந்து தொற்றுப் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.