மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர்நீதிமன்றம்

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :14 ஜூன் 2022, 12:35 pm

DIN

காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பைக் காலி செய்யக்கோரி காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் சமீப காலங்களில் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாகவும் தொடர்ந்து இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு கவனிப்பதில்லை எனவும் காவல்துறையினர் செய்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனவும் கேள்வி எழுப்பியதுடன் அரசு சார்பில் அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற ஜுன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.