தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தகுதியான மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

பள்ளி, கல்லூரி மாணவா்களில் தகுதியானவா்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :17 ஜூன் 2022, 8:45 pm

DIN

பள்ளி, கல்லூரி மாணவா்களில் தகுதியானவா்களுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

கல்வி நிறுவனங்களில் கரோனா தடுப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, மாணவா்கள் முகக் கவசம் மற்றும் தனி நபா் இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மண்டல சுகாதார அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து தடுப்பூசி முகாம்கள் நடத்துவதும் அவசியம்.

நோய்ப் பரவலுக்கு வித்திடாத வகையில் பள்ளி, கல்லூரி வளாகங்கள் எப்போதும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். ஆசிரியா்கள், மாணவா்களுக்கு நாள்தோறும் வெப்பமானி மூலம் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்தல் முக்கியம் என்று அந்த கடிதத்தில் மாநகராட்சி ஆணையா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.