கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பரவலாக மழை: உழவர் சந்தையில் நீர் தேங்கியதால் மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கின.

News image
கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:33 am

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மழைநீர் குளம் போல் தேங்கின.

கிருஷ்ணகிரி உழவர் சந்தையானது 2009-ஆம் ஆண்டு 72 கடைகளுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 17 லட்சம் மதிப்பில் உழவர் சந்தை வளாகம் புனரமைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் மழைநீர் வெளியே செல்லாத நிலையில் குளம்போல் காட்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி உழவர் சந்தை அருகே புதியதாக குளிர்பதனக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

Story image

அந்தக் கிடங்கு கட்டும்போது, உழவர் சந்தையில் இருந்து மழை நீர் வெளியேறும் பகுதியை முற்றிலும் அடைத்து விட்டனர். இதனால் உழவர் சந்தையில் இருந்து மழைநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க முடியாமலும், பொதுமக்கள் காய்கறிகளை வாங்க இயலாத சூழ்நிலையும் ஏற்பட்டது.

இனிவரும் காலங்களில் உழவர் சந்தை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரையில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) : ஊத்தங்கரை :122,  தளி-60, சூளகிரி  - 82, பெனுகொண்டபுரம் - 45.2, ராயக்கோட்டை - 39, தேன்கனிக்கோட்டை - 37, ஓசூர் - 33, நெடுங்கல் - 27.80, கிருஷ்ணகிரி - 16.90, போச்சம்பள்ளி - 14.2, பாரூர் - 9.40, அஞ்செட்டி -5.40. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 491.90 மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 40.99 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.