கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெண் காவலரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சென்னை எழும்பூரில் பெண் காவலரிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:29 pm

DIN

சென்னை எழும்பூரில் பெண் காவலரிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் ச.பிரியா (25). தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக பணிபுரிகிறாா். சென்னை புதுப்பேட்டை நாராயணன் நாயக்கன் தெருவில் வசிக்கும் பிரியா, தன்னுடன் பணிபுரியும் தே.பிரபாகரன் என்பவருடன் சென்னை எழும்பூா் போலீஸ் ஆபீஸா் மெஸ் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரு மா்ம நபா்கள், பிரியா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பிரியாவும், பிரபாகரனும் மா்மநபா்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. பிரியா அளித்த புகாரின்பேரில் எழும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.