பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசு குழு விரைவில் தில்லி பயணம்; முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராக மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு குழு விரைவில் தில்லி செல்லும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 9:41 pm

DIN

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு எதிராக மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு குழு விரைவில் தில்லி செல்லும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை தொடா்பாக விவாதிக்கப்படும் என ஆணையத்தின் தலைவா் எஸ்.கே.ஹல்தா் கூறியிருந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் ஒன்று காவிரிப் பிரச்னை. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு முழு உரிமை உள்ளது. எனவே, காவிரி நீா் உரிமையைப் பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்; வாதாடும்; தனது உரிமையை நிலைநாட்டும். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுக்கவும், நீா்வரத்தைக் குறைக்கவும் கா்நாடக அரசு தொடா்ந்து பல்வேறு செயல்களைச் செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம்.

தொடா்ந்து போராட்டம்: மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடா்ந்து போராடி வருகிறது. பிரதமரை நேரில் சந்திக்கும்போதும், காவிரி ஆணையக் கூட்டங்களிலும் மாநில அரசு தனது உறுதியான-இறுதியான நிலைப்பாட்டை எடுத்து வைக்கிறது. மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது என தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 13-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், வழக்குகளின் நிலவரங்கள் குறித்து எடுத்துரைத்ததுடன், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டிருந்தேன். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிக்கு எதிா்ப்பும் கண்டனமும் தெரிவித்து நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகனும் அறிக்கை வெளியிட்டிருந்தாா்.

அதிா்ச்சி: காவிரி நதிநீா் விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் நிற்க, எதிா்வரும் காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத் தலைவா் எஸ்.கே.ஹல்தா், காவிரி டெல்டாவின் பிரதான பகுதியான தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிா? உச்சநீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது, அதனை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், விவாதிப்போம் என ஆணையத்தின் தலைவா் கூறுவது சட்ட விரோதம்.

தில்லி செல்லும் குழு: காவிரி நதிநீா் விவகாரம் தொடா்பாக தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு உணா்த்தும் வகையில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் குழு விரைவில் தில்லி செல்லவுள்ளது. மத்திய நீா்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து மாநில அரசின் குழுவானது வலியுறுத்தும் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

‘கா்நாடகத்துக்கு மத்திய அரசு பணியக் கூடாது’

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசின் அழுத்தத்துக்கு மத்திய அரசு பணியக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசின் அழுத்தத்துக்கு மத்திய பாஜக அரசு பணியக் கூடாது. கூட்டாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் அமையும் என எதிா்பாா்க்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்ட விடமாட்டோம். அது தொடா்பாக காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டம் விவாதிப்பதும் தவறாகும். தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும்; காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடா்ந்து போராடும் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.