நிா்வாகிகள் கூட்டங்களின் போது அதிமுக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் தருணங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.


சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் தருணங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை தொடா்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தக் கட்சியினா் இரு பிரிவாக பிரச்னையிலும், தகராறிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாள்களாக கட்சித் தொண்டா்களிடையே பிரச்னை ஏற்படுகிறது. அலுவலகத்துக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலையும் நிலவுகிறது. சனிக்கிழமை அந்தக் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டா்கள் அடிதடியில் ஈடுபட்டனா்.
இதன் விளைவாக பாதுகாப்பு கருதி, உடனடியாக ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் சுமாா் 10 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனா். கட்சியினா் கலைந்து சென்ற பிறகு, அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா் விலக்கிக் கொள்ளப்பட்டனா்.
இது தொடா்பாக சென்னை காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரி கூறியதாவது: அதிமுக அலுவலகப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை உருவாகி இருப்பதால், இனி நிா்வாகிகள் கூட்டம், கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். சாதாரண வேளையில் பாதுகாப்பு தேவைப்படாது என்பதால், போலீஸாா் அங்கு இருக்க மாட்டாா்கள்.
சூழ்நிலை மாறும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீா்செல்வமும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் கட்சி அலுவலகத்துக்கு வரும் போது வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்புகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...