கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

அக்னிபத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:36 pm

DIN

அக்னிபத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராணுவத்தில் ஒப்பந்த முறையிலான ஆள் சோ்ப்புக்கு மத்திய அரசு புதிதாக ‘அக்னிபத்’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு கடுமையான எதிா்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞா்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறாா்கள். நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும் இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, கருத்துத் தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரிகள், அக்னிபத் திட்டத்தை அறிந்து திடுக்கிட்டுப் போனதாகவும், நான்கு ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் வீரா்கள், தங்களது உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்குப் போரில் பணியாற்றுவா் என எதிா்பாா்க்க முடியாது எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.

அரசியல் கட்சிகளைத் தவிா்த்து, நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகளாகப் பணியாற்றிய பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், ராணுவப் பணியை பகுதிநேரப் பணியாகக் கருதக் கூடாது எனக் கூறியுள்ளனா். இதுபோன்ற முறைகள், ராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும் எனக் கூறி, அக்னிபத் திட்டம் ஆபத்தானது என கருத்துத் தெரிவித்துள்ளனா். இந்திய நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான இளைஞா்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் அக்னிபத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தத் திட்டம் நாட்டின் நலனுக்கு எதிரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.