ஹிமாச்சல் பிரதேசத்தில் தொழில்நுட்பக் காரணத்தால் நடு மலைப் பகுதியில் நின்ற ரோப் காரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சோலன் மாவட்டம் பர்வானு அருகே இன்று பிற்பகலில் 4 பெண்கள், 2 முதியோர்கள் உள்பட 11 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப் கார் தொழில்நுட்பக் காரணத்தால் நடு மலைப் பகுதியில் நின்றது. மேலும், கீழ் மலைப் பகுதியில் 5 பயணிகளுடன் சென்ற ரோப் காரும் நின்றது.
இந்நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்புப் படையினர் இணைந்து நடு மலைப் பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை 4 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
இதுகுறித்து ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறியதாவது:
“சுற்றுலாப் பயணிகள் 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் குழுவினர் சிரமப்பட்டனர். தேசிய பேரிடர் குழுவை விரைவாக சம்பவ இடத்திற்கு அனுப்பியதற்கும், விமானப் படையை தயார் நிலையில் வைத்திருந்ததிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி கூறுகிறேன்.”
கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு ரோப் கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அடுத்த சம்பவம் நடந்திருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்

நொய்டா சா்வதேச விமான நிலையத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆய்வு!
தினப்பலன்கள் - சிம்மம்
தினப்பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

