விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 737 பேருக்கு கரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2022, 12:52 pm

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 737 பேருக்கு கரோனா நோய்த் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக 737 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை 686 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,951-லிருந்து 4,366 ஆக உயர்ந்துள்ளது. 322 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டங்கள்:

அதிகளவாக சென்னையில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும், திருவள்ளூரில் 49 பேருக்கும், கன்னியாகுமரியில் 42 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 24 பேருக்கும், கோவையில் 18 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.