இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை: ஜெயகுமார் பேட்டி

அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

News image
ஜெயகுமார்
Updated On :23 ஜூன் 2022, 3:06 am

DIN


அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியது:

தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என்று நேரில் வந்து ஆதரவும் தெரிவித்து வருகின்றனா்.

அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை. 

நீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.