ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் தீர்வு: ஜெயக்குமார்

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் நிச்சயம்  தீர்வு காணப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் தீர்வு: ஜெயக்குமார்
Published on
Updated on
1 min read

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு ஜூலை 11-ல் நிச்சயம்  தீர்வு காணப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் தான் அறிவிப்பு செல்லும். இது சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டம். கட்சியை சதிகாரர்கள் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்” என ஆவேசமாக பேசினார். 

சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம், ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி  நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

கடுமையான எதிர்பார்ப்புகளுடன் இன்று முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கிய அதிமுக பொதுக் குழுக் கூட்டம் சலசலப்புடன் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com