தமிழ்நாட்டில் புதிதாக 1,061 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | கரோனாவிலிருந்து குணமடைந்தார் அஸ்வின்
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது உள்பட மொத்தம் 1,061 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,64,131 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 567 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,20,931 பேர் குணமடைந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,174 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்: