சென்னை: அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது.
அதிமுக பொதுக் குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். அவர் உள்ளே வரும் போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் பலரும் கோஷம் எழுப்பிய நிலையில், அவர் ஸ்ரீவாரு மண்டபத்துக்குள் வந்த போது, வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், ஓ. பன்னீர்செல்வத்தை வெளியே போகச் சொல்லியும் சில அதிமுக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
ஒரு பக்கம் வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கமும், வேண்டாம் வேண்டாம் இரட்டைத் தலைமை வேண்டாம் என்ற முழக்கமும் மண்டபம் முழுக்க எதிரொலித்து வருகிறது.
இதற்கிடையே, துரோகி என எழுந்த முழக்கத்தால் பொதுக் குழு மேடையிலிருந்து வைத்திலிங்கம் இறங்கிவிட்டார்.
அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளார். ஆனால், அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் தொடர்ந்து கோஷங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
'ஆயிரம் கைகள் மறத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைச்சர் வளர்மதி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!

Akira And FIFA! Anime மற்றும் Games குறித்த
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

