சென்னை: பி.இ, பி.டெக் 2-ம் ஆண்டு படிப்பில் நேரடியாக சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
பாலிடெக்னிக் அல்லது தகுதியான பிரிவில் பி.எஸ்.சி. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்: தில்லி போலீசார் விசாரணை
முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்திலும் இரண்டாமாண்டு பி.இ. படிப்பில் சேருவதற்கான நடைமுறை நிகழாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் www.tnlea.com, accet.co.in, accetedu.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.