வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிகள், முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், கடனுதவிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி வழங்குதல், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா மற்றும் தையல் இயந்திரம் வழங்குதல், பழங்குடியினர் சாதிச்சான்றுகள் வழங்குதல்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் உதவிகள், விசைத்தெளிப்பான் மற்றும் கைத்தெளிப்பான் வழங்குதல், விவசாய தொழில் முனைவோருக்கான உதவித்தொகை, தென்னங்கன்று வழங்குதல், பண்ணைக்குட்டை அமைத்தல், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம் மற்றும் அரவை இயந்திரம் வழங்குதல், சூரிய சக்திமின் மோட்டார் அமைத்தல், சூரிய சக்தி மின் வேலி அமைத்தல், வங்கிக்கடனுதவிகள் போன்ற உதவிகள்; பால்வளத்துறை சார்பில் ஆவின் பாலகம் அமைத்தல், பால் கறவை இயந்திரம் வழங்குதல், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் விவசாயக் கடன், கல்விக் கடன், தொழில் கடன் உதவிகள் வழங்குதல், சமூக நலத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஸ்கூட்டர் வண்டிகள், காது கேட்கும் கருவிகள், தையல் இயந்திரங்கள், தொழில் மானிய கடனுதவிகள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் செயற்கைக்கால் வழங்குதல்; கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்குதல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல், பழங்குடியினர் நலத்துறை சார்பில்வன உரிமைப் பட்டா, இலவச வீடு, இருளர் நலவாரிய அட்டைகள் வழங்குதல், தாட்கோ சார்பில் குழுக்களுக்கு கடன் உதவித்தொகை வழங்குதல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உதவிகள், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குதல் என பல்வேறு துறைகளின் சார்பில் முதல்வர் ஸ்டாலின், 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.