தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகினர்.
தஞ்சாவூர் அருகே தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புதூர் பிரிவு சாலையோரம் செவ்வாய்க்கிழமை காலை லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இந்த லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் காரை ஓட்டிச் சென்ற வடக்குவாசல் ஜெபமாலைபுரத்தை சேர்ந்த கதிரவன் மகன் விஜய்(35), பயணம் செய்த டி.சி.டபிள்யூ.எஸ். காலனி பிருந்தாவனத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெயராமன்(22) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.