நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மகா சிவராத்திரி விழா: கோவை வந்தார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கோவை வந்தடைந்தார். 

News image
Updated On :1 மார்ச் 2022, 7:23 am

DIN

மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கோவை வந்தடைந்தார். 

கோவை, ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வர். அந்தவகையில், மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று பிற்பகல் கோவை வந்தடைந்தார். 

Story image

தில்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பி. ஆர். நடராஜன் வரவேற்றார். 

Story image

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, 'உலகில் அமைதி நிலவ வேண்டும் என விரும்புகிறோம். உலகம் ஒரு குடும்பமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எல்லைக்குள் அமைதியாக இருக்க வேண்டும். மற்ற நாடுகளுடன் அமைதியையும் ஆரோக்கியமான உறவையும் பேணுவதில் இந்தியா எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.