47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூர் துணை மேயர் பதவி இந்திய கம்யூ.க்கு ஒதுக்கீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

News image
திருப்பூர் மாநகராட்சி
Updated On :3 மார்ச் 2022, 3:31 am

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியானது அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு பதவி ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவிகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருப்பூர் துணை மேயர், கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர், பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடி உள்ளிட்ட நகராட்சிகளின் துணைத் தலைவர், வத்திராயிருப்பு, பூகப்பாண்டு, சிவகிரி, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிகள் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.