மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News image
Updated On :4 மார்ச் 2022, 12:42 pm

DIN

கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் ரா.மாதவன், பெ. முருகன், சபியா, தீபா, வா.செந்தில், சுமதி, கு.முருகன் ஆகியோர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்து, நகராட்சி அலுவலகம் முன்பு நின்று  கோஷமிட்டனர்.

இதுபற்றி நகர செயலாளர் ரா.ஜெகதீஸ் கூறும்போது, 

நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை, மேலும் திமுக அரசு தேர்தல் அறிக்கையின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து அதிமுகவினர் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தனர், தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.