கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அதிமுக வார்டு உறுப்பினர்கள் ரா.மாதவன், பெ. முருகன், சபியா, தீபா, வா.செந்தில், சுமதி, கு.முருகன் ஆகியோர் நகர்மன்ற தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்து, நகராட்சி அலுவலகம் முன்பு நின்று கோஷமிட்டனர்.
இதுபற்றி நகர செயலாளர் ரா.ஜெகதீஸ் கூறும்போது,
நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது அதிமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை, மேலும் திமுக அரசு தேர்தல் அறிக்கையின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து அதிமுகவினர் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தனர், தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...