மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கெங்கவல்லி பேரூராட்சி தலைவராக லோகாம்பாள் போட்டியின்றி தேர்வு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி தலைவராக திமுக நகர திமுக பொறுப்பாளர் சு.பாலமுருகனின் தாயார் லோகாம்பாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

News image
கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் லோகாம்பாளுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கும் செயல் அலுவலர் ராணி.
Updated On :4 மார்ச் 2022, 12:42 pm

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி தலைவராக திமுக நகர திமுக பொறுப்பாளர் சு.பாலமுருகனின் தாயார் லோகாம்பாள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

அவருக்கு  கெங்கவல்லி பேரூராட்சி  செயல் அலுவலர் ராணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  தலைவராக பொறுப்பேற்ற சு.லோகம்பாளுக்கு நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் தனது தாயாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள் கவிதா, லதா, தங்கபாண்டியன், கலியம்மாள், ஹம்சவர்தினி, சையது, மருதம்பாள், வஹிதா பானு, அமுதா, சத்யா, முருகேசன், அருண்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.  

அதனையடுத்து லோகாம்பாள் கெங்கவல்லியில் உள்ள அண்ணா சிலை, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.