மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: அதிமுக-திமுக மோதல்

பேளூர் முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தேர்வு தேர்தலில் திமுக-அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 12:43 pm

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தேர்வு தேர்தலில் திமுக-அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக தலா 6 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இன்று காலை பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில்  திமுக சார்பில் ஜெயசெல்வியும், அதிமுக சார்பில் பரமேஸ்வரியும் பதவிக்குப் போட்டியிட்டனர். அப்போது அதிமுக-திமுக கவுன்சிலர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்ததால் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி ராமு அறிவித்தார்.  

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸார், கூடியிருந்த இரு தரப்பினர் மற்றும் தொண்டர்களையும் அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.