அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போர்ச் சூழலால் தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்தது.

News image
கச்சா எண்ணெய்
Updated On :3 மார்ச் 2026, 3:02 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயா்ந்து வருகிறது.

ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய மோதல் விரிவடைந்து வருவதாலும், ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாலும், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதை தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை $3க்கு மேல் உயர்ந்ததுள்ளது.

இதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில், பீப்பாய் ஒன்றுக்கு $80.89 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 4.1 சதவீதம் அதிகம். மேலும் திங்கள்கிழமை, ஒப்பந்தம் $82.37 ஆக உயர்ந்தது வா்த்தகமானது.

மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை $2.55 உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு $73.78 ஆக உள்ளது. ஜூன் 2025 க்குப் பிறகு இது அதன் அதிகபட்ச விலை என்ற அளவில் உள்ளது.

அதிகரித்து வரும் மத்திய கிழக்கு மோதல், உள்ளிட்டவையால், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்று நிபுணா்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒருவேளை, ஹோா்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, கச்சா எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது. மாறாக, மோதல் விரைவில் முடிவுக்கு வந்தால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.