இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி

சென்னை புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசியுள்ளார். 

News image

டி.ஜெயக்குமார்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:07 pm IST

சென்னை புழல் சிறையில் உள்ள ஜெயக்குமாரை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசியுள்ளார். 

திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல் மற்றும் நில அபகரிப்பு வழக்கு என மூன்று வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு முதல் இரண்டு வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. 

தொடர்ந்து இன்று நில அபகரிப்பு வழக்கிலும் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று வழக்கிலும் ஜாமீன்பெற்றுள்ள ஜெயக்குமார் விரையில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று சந்தித்துப் பேசியுள்ளார். 

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புழல் சிறையில், ஜெயக்குமாரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.