47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்புவனம் அருகே ஆட்டுக்கிடா முட்டு சண்டைப் போட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டு கிடா முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது.

News image
போட்டியில் வென்ற ஆட்டுக்கிடாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்  சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி.
Updated On :15 மார்ச் 2022, 11:12 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டுக்கிடா முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் கிராமத்தில் திமுகவினர் நடத்திய இந்த ஆட்டுக் கிடா முட்டு சண்டைப் போட்டியில் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த சண்டைக்கான வளர்ப்பு ஆட்டுக் கிடாக்கள் பங்கேற்று மோதின.

போட்டியில் வென்ற ஆட்டுக் கிடாக்களின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு வென்ற ஆட்டுக் கிடாக்களின் கழுத்தில் வேஷ்டி, துண்டுகள் அணிவிக்கப்பட்டது.

மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி பரிசளிப்பு விழாவில் பங்கேற்று ஆட்டுக் கிடாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.