இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் பரிசீலினை செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன் பேட்டி

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலினை செய்ய வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:44 am

DIN

அரியலூர்: இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலினை செய்ய வேண்டும் என்று மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் அடுத்த கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அவர் தொடக்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தமிழக அரசின் பொது மற்றும் வேளாண் துறை நிதிநிலை அறிக்கை பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பொது நிதிநிலை அறிக்கையில் சமூக நீதியை நிலைநாட்டுவதுக்குரிய திட்டங்களை அறிவித்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த எட்டு மாதங்களில் சிறப்பான நிர்வாகத்தின் மூலம் வருவாய் பற்றாக்குறையை குறைத்து இருப்பது பாராட்டுக்குரியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது இயல்பான ஒன்று தான். ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிகளையும், அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். 

தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலினை செய்ய வேண்டும்.

ரஷியா-உக்ரைனில் போரின் காரணமாக அங்கிருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். 

ரஷியா-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா இரண்டு நாடுகளிடமும் வலியுறுத்த வேண்டும் என்றார் தொல்.திருமாவளவன். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.