ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமிப்பதா?: உயர்நீதிமன்றம் கேள்வி

எந்தக் கடவுள் பொது இடத்தை ஆக்கிரமிக்கச் சொன்னார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :25 மார்ச் 2022, 9:44 am

DIN

எந்தக் கடவுள் பொது இடத்தை ஆக்கிரமிக்கச் சொன்னார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல்லில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோயில் கட்டுமானம் உள்ளதாக பாப்பாயி என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார்.

இன்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி அடுத்த 2 மாதங்களில் கோயில் நிர்வாகம் கட்டுமானங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், கோயில் நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில் பொது இடத்தை ஆக்கிரமிக்கச் சொல்லி எந்தக் கடவுளும் கேட்பதில்லை என்றும் கடவுளின் பெயரில் நீதிமன்றத்தின் கண்களை மூடிவிட முடியாது எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.