சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விருதுநகர் பாலியல் வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசாரணையை எஸ்.பி. முத்தரசி இன்று தொடங்கியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:47 am

DIN

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வழக்கு தொடா்பாக சிபிசிஐடி விசாரணையை எஸ்.பி. முத்தரசி இன்று தொடங்கியுள்ளார். 

விருதுநகா் அருகே 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதனடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த வழக்கை விசாரித்து வந்த விருதுநகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா, அந்த வழக்குத் தொடா்பான கோப்புகளை மதுரை சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளரும், சிறப்பு புலனாய்வு அதிகாரியுமான வினோதினியிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

இதையடுத்து, சிபிசிஐடி சிறப்பு அதிகாரி முத்தரசி இந்த வழக்கின் விசாரணையை இன்று தொடங்கியுள்ளார். 60 நாள்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

வழக்கு தொடா்பாக ஹரிஹரன், சுனைத் அஹமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் உள்பட 8 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் முத்தரசி, துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி, காவல் ஆய்வாளர் சாவித்திரி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்திற்குச் சென்று, இந்த வழக்கில் சிறையில் உள்ளவர்களை மூன்று நாள் நீதிமன்றக் நீதிமன்ற காவலில் எடுக்க மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் சிபிசிஐடி மற்றொரு குழு பாதிக்கப்பட்ட இளம்பெண் தங்கியுள்ள காப்பகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.