சேலம்: வனவாசி பேரூராட்சியைக் கைப்பற்றியது அதிமுக

சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
வனவாசி பேரூராட்சித் தலைவர் ஞானசேகரன்
வனவாசி பேரூராட்சித் தலைவர் ஞானசேகரன்
Updated on
1 min read

சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

வனவாசி நகர அதிமுக செயலாளரும் வனவாசி பேரூராட்சி 11-வது வார்டு உறுப்பினருமான ஞானசேகரன் பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 2 வார்டுகளிலும் அதிமுக 8 வார்டுகளிலும் சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில்  திமுக உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com