அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மே 10 வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 மார்ச் 2022, 6:48 am

DIN

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். மாா்ச் 19-இல் வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். மார்ச் 14 ஆம் தேதியுடன் முதல் அமர்வு நிறைவு பெற்றது. இதையடுத்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கும் என்றும் மார்ச் 30 அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும்  என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார். 

அதன்படி, இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடவுள்ளது.

ஏப்ரல் 6ல் நீர்வளத்துறை, ஏப்ரல் 7ல் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, ஏப்ரல் 8 ஆம் தேதி கூட்டுறவுத் துறை, உணவுத் துறை, ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை என துறை வாரியாக கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.