47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சரவெடி பட்டாசுகள் வைத்திருந்தவா் கைது

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :31 மார்ச் 2022, 6:30 pm

DIN

உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஐஸ்வா்யா நகா் பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் 5 காகித அட்டைப்பெட்டிகளுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்தாராம். போலீஸாா் அவா் வைத்திருந்த பெட்டிகளைச் சோதனை செய்தபோது,

அதில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி பட்டாசு இருந்ததாம். விசாரணையில் அந்த நபா் சிவகாசி ஜவுளிகடை வீதியைச் சோ்ந்த ராம்குமாா் (54) எனத்தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, 5 பெட்டி சரவெடிகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.