தமிழிலோ, ஆங்கிலத்திலோ மட்டுமே உறுதிமொழி: மா.சுப்பிரமணியன்

தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழகத்திலுள்ள 36 மருத்துவ கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக பேசிய அவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டது கண்டனத்திற்குரியது என்று கூறினார். 

ஒரு காலக்கட்டத்தில் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவராக வேண்டும் என்ற நிலைமை இருந்தது என்றும், ஆனால் தற்போது அவை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com