அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஒழுங்கீனத்தில் ஈடுபடாத மாணவர்கள்

தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு 3,119 மையங்களில் இன்று நடைபெற்றது.

News image
பிளஸ் 2 பொதுத் தோ்வு: ஒழுங்கீனத்தில் ஈடுபடாத மாணவர்கள் (கோப்புப் படம்)
Updated On :5 மே 2022, 12:46 pm

DIN

தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு 3,119 மையங்களில் இன்று நடைபெற்றது.

இந்தத் தோ்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையும், அரசுத் தேர்வுகள் இயக்ககமும் மேற்கொண்டிருந்தன.

மொழிப்பாடத் தேர்வு இன்று காலை நடந்து முடிந்த நிலையில், மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் இன்று நடைபெற்ற மொழிப் பாடத் தேர்வன்று ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டத் தேர்வர்கள் எவரும் இல்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தோ்வுகள் நடைபெற்றன. தோ்வையொட்டி அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முன்னதாக, பொதுத் தோ்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தோ்வெழுதத் தடை விதிக்கப்படும். தோ்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தோ்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 28 வரை நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.