நிகழாண்டில் பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்காக, ரூ.7.5 லட்சம் கோடியை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.5.5 லட்சம் கோடியை விட இந்த ஆண்டு அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வழங்குகிறோம். தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை வேகமாக நிறைவேற்ற மத்திய அரசு பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது. எனவே, தொழில் துறை வளர உள்கட்டமைப்பு தேவைப்படும் இடங்களில் அவற்றை மேம்படுத்த வேண்டும். இதன்மூலமாக, ஏற்றுமதி அதிகரிக்கும். எனவே, தொழில்துறைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.