சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட்: உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

News image
வெ.இறையன்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:16 am

DIN

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

உலகளவில் மூளைக்கு அதிக வேலை தரும் ஆட்டமாக செஸ் உள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் செஸ் விளையாட்டில் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. ஏனைய விளையாட்டுகளுக்கு முத்தாய்ப்பான போட்டியாக ஒலிம்பிக் போட்டிகள் அமைந்துள்ளன. அதில் செஸ் இடம் பெறாத நிலையில், செஸ் ஒலிம்பியாட் என தனியாக கௌரவமிக்க போட்டி கடந்த 1924 முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சோவியத் யூனியன், ரஷியா அதிகமுறை தங்கம் வென்றுள்ளன. இந்தியா கடந்த 2020-இல் ஆன்லைன் முறையில் நடந்த போட்டியில் தங்கம் வென்றிருந்தது. இதனிடையே சா்வதேச செஸ் சம்மேளனம் ஃபிடே, அகிலஇந்திய செஸ் சம்மேளனம் ஆகியவற்றின் முயற்சியால் சென்னையில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வா் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தாா். இதற்காக ரூ.100 கோடியையும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் 2500-க்கு மேற்பட்டோா் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த செயலாளர்கள், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.