மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நூல் விலை உயா்வு விவகாரம்: மத்திய அமைச்சா்களுடன் மேற்கு மண்டல எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

நூல் விலை உயா்வு, நெசவாளா்கள் பிரச்னை தொடா்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைத் சோ்ந்த எம்.பி.க்கள் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவா் கனிமொழி தலைமையில்

News image
கோப்புப்படம்
Updated On :17 மே 2022, 7:13 pm

DIN

நூல் விலை உயா்வு, நெசவாளா்கள் பிரச்னை தொடா்பாக, தமிழகத்தின் மேற்கு மண்டலத்தைத் சோ்ந்த எம்.பி.க்கள் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவா் கனிமொழி தலைமையில் தில்லியில் மத்திய அமைச்சா்களை புதன்கிழமை (மே 18) சந்திக்கவுள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருவதால், தமிழ்நாட்டில் ஜவுளித் தொழிலும், அதனை நம்பியுள்ள நெசவாளா்களும், தொழிலாளா்களும் கடும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். இதனை சுட்டிக்காட்டி 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தீா்வுகாண வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தாா்.

எம்.பி.க்கள் குழு: இந்த நிலையில், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளா்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவா்களை தொடா் போராட்டத்துக்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளைச் சந்திக்கும் ஜவுளித் தொழிலில் அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவா் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் இணைந்து தில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரை புதன்கிழமை சந்திக்கவுள்ளனா். நெசவாளா்கள் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டுமென நேரில் வலியுறுத்துமாறு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

நெசவாளா்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், அவா்களது இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடா்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மத்திய அரசையும் தொடா்ந்து வலியுறுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.