ஒகேனக்கல் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்(கோப்புப்படம்)
ஒகேனக்கல் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்(கோப்புப்படம்)

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
Published on

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com